Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்செங்கோடு: திருச்செங்கோடு, ஒன்றியம் தோக்கவாடி குச்சி பாளையம் ஊராட்சி பகுதியை சேர்ந்த ஆசிரியை மஞ்சுளா. இவரது கணவர் ஈஸ்வரன்.
ஆலாம்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த மஞ்சுளா கடந்த 3 ஆம் தேதி எஸ்.பி.பி. காலனி வாய்க்கால் பாலம் பகுதியில் காலை 8.30 மணி அளவில் பணிக்கு சென்ற போது இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி மூளைச் சாவடைந்தார்.
இதனை அடுத்துஆசிரியை மஞ்சுளாவின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
பெருந்துறை சானிடோரியம் மருத்துவமனையில் கண் சிறுநீரகம், இதயம், தோல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட உடல் உறுப்புகள் தானம் செய்யபட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் முதல் உடல் உறுப்பு தானம் செய்த அரசு ஊழியருக்கு தமிழ்நாடு அரசு ஆணைப்படி அரசு மரியாதை செய்யப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச. உமா உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் சார்பில் அவரது இல்லத்தில் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.